சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் உண்ணா விரத போராட்டம்!
1055 views
Subscribe தமிழ்நாடு videosகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் பரப்பளவில் 5-வது சிப்காட் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இப்பணிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறு, குறு விவசாயிகள் உத்தனப்பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் பல்வேறு நூதன போராட்டங்களிலும் ஈடுப்பட்டனர். ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்காததால் இன்று உத்தனப்பள்ளியில் விவசாயிகள் தங்களது குடும்பங்களுடன் அமர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால்காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளிடம்பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர்